amazon

வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012


முதுகு எலும்பு 




மனித முதுகு எலும்பு   ஆரோக்கியமாய் இருந்தால் தான் அவனால் 
நிமிர்ந்து உட்காரவே நன்றாக நடக்கவோ முடியும் . முதுகு எலும்பு 
ஒரு எலும்பால் ஆனது அல்ல . வளையம் போன்ற 
33துண்டுகலளால் ஆனது . 

 இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 
எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு 
பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த 
நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் 
சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) 
அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் 
அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் 
இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் 
பகுதி அமைந்துள்ளது. 
இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள 
பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில 
வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் 
தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் 
முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக 
வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட 
வைக்கிறது.”

உயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது, ஓடும்போது, தாவும்போது, 
தாண்டும்போது, அதிக எடையுள்ள பொருளை தலைச்சுமையாக 
தூக்கும்போது, குனியும் போது, நிமிரும் போது, வளையும்போது, 
நெளியும் போதும் ஏற்படும் எல்லாவிதமான அழுத்தத்தையும், இந்த 
`டிஸ்க்’ தான், தாங்கிக்கொண்டு குருத்தெலும்புகள் 
பாதிப்படையாமல், உடைந்து விடாமல், பாதுகாத்து வருகிறது. 
அதற்காக, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் இருக்கிறது என்பதற்காக, 
இஷ்டம் போல் இருநூறு கிலோ எடையைத் தூக்கி தலையில் 
வைத்தால், இந்த `டிஸ்க்’ தாங்காது. 
ஒரு குறிப்பிட்ட அளவு எடை, ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து 
குதித்தல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளைதல், இப்படி எல்லா 
செயல்களிலுமே, ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இந்த 
`டிஸ்க்’கால் கண்ட்ரோல் பண்ணி, உடம்பை பாதுகாக்க முடியும். 
அளவுக்கு மீறினால் இந்த `டிஸ்க்’கால் ஒன்றும் செய்ய முடியாது. 
மனித உடம்பு ரப்பரினால் செய்யப்பட்டதல்ல. இந்த டிஸ்க்கிலுள்ள 
ஆன்னுலஸ் பைபரில், சுமார் 65 சதவீதம் நீரும், நிïக்ளியஸ் பைபரில்,  
சுமார் 80 சதவீதம் நீரும் இருக்கும். ரத்த சப்ளை இந்த 
டிஸ்க்குகளுக்குக் கிடையாது.
வயது ஆக, ஆக நியூக்ளியஸ் பைபர் அடுக்கிலுள்ள 
நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும்.

சனி, பிப்ரவரி 18, 2012

எய்ட்ஸ்

சீனாவில், எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இதுவரை அந்நாட்டில் எய்ட்ஸ் நோயால் 68 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.சீனாவில், எய்ட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் ஏழு லட்சத்து 40 ஆயிரம் பேர். இவர்களில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் அந்நோயின் இறுதிக் கட்டத்தில்இருப்பவர்கள்.சீன கம்யூனிஸ்ட் அரசு, அந்நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு கண்காணிப்புகள் இருந்த போதிலும், எய்ட்சால்பாதிக்கப்பட்டோர் என்பது தெரிந்தால் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தால் பலர் தங்கள் உடல்நிலையை பற்றித்தெளிவாக வெளியில் சொல்வதில்லை.
மேலும், கடந்தாண்டு, எச்.ஐ.வி.,யால் புதிதாகப் பாதிக்கப்பட்ட 44 ஆயிரம் பேரில், 13 சதவீதம் பேர் ஆண் ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத் தக்கது.இவ்வளவுக்கும், ஓரினச் சேர்க்கைக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் மட்டும் ஏழாயிரத்து 700 பேர் எய்ட்சுக்குப் பலியாகியுள்ளனர். கடந்தாண்டோடு இதுவரை சீனாவில் மொத்தம் 68 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் 1990களில் ஆரம்பிக்கப்பட்ட, "ரத்த விற்பனை' திட்டத்தால் தான் இந்நோய் அதிகளவில் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவின் துணை இயக்குனர் ஹாவோ யாங் கூறியுள்ளார்.கடந்த 1990 முதல், சீனாவில் ரத்த விற்பனைத் திட்டம் துவக்கப்பட்டது. அதன்படி, ஒருவர் தனது ரத்தத்தை உரிய ஏஜன்சியிடம் விற்று அதற்கேற்ப பணம் பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதலாக, ஒருவரின் ரத்தத்தில் உள்ள "பிளாஸ்மா' வை மட்டும் எடுத்து விட்டு, மீண்டும் அதே ரத்தத்தைக் கொடுத்தவர் உடம்பிலேயே செலுத்தி விடுவர்.இம்முறையில் பாதுகாப்பற்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டதால் தான் அதிகளவில் எய்ட்ஸ் பரவியது என்கிறார் யாங். மேலும், நாடு முழுவதும் போலி ஏஜன்சிகள் அதிகரித்து விட்டதால் ரத்த பரிமாற்றத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்கிறார் அவர்.
குறிப்பாக, இந்த ரத்த விற்பனைத் திட்டத்தால், ஹெனான், ஷான்ஷி, ஆன்ஹூயி மற்றும் ஹூபேய் ஆகிய மாகாணங்களின் கிராமப் புறப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், சீனாவில் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களின் முழு எண்ணிக்கையும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.



thanks to ekarai